தாயகத்தில் சிங்கள பாசிசஅரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தமிழினப் படுகொலைகளைக் கண்டித்தும் சிங்கள இராணுவத்தின் முற்றுகைக்குள் முள்ளுக்கம்பி வேலிகளுக்கிடையில் துயர வாழ்வை வாழும் எம்மக்களிற்காக நீதிகேட்டும், தமிழர்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் சமஉரிமையுடனும் வாழ நிரந்தரத்தீர்வு "தமிழீழமே" என்பதை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
இப்பேரணியானது, எதிர்வரும் 06.06.2009 சனி பிற்பகல் 3மணிக்கு "டென் காக் - சென்றல்" பிரதான தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து, நாடாளுமன்றத்தை சென்றடையவுள்ளது.
எனவே, எமது தற்கால வரலாற்றுக்கடமையை உணர்ந்து, இப்பேரணியில் பெருந்திரளாக அணிதிரளுமாறு நெதர்லாந்துவாழ் தமிழ்மக்களை, நெதர்லாந்து மக்கள் எழுச்சிக்குழு கேட்டுக்கொள்கின்றது.
No comments:
Post a Comment