Wednesday, June 3, 2009

இரத்மலானை-பலாலி விமான சேவை வன்னியூடாக நடைபெறும்

இரத்மலானை விமான நிலையத்திற்கும்  பலாலி விமான நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் விமான சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது.

அதேபோல, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை விமான நிலையத்தை விமானங்கள் வந்தடைந்தன.

வன்னியில் யுத்தம் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை  விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே விமானங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாதையின்படி இந்த சேவை நடைபெற்றால் பயண நேரமும் சுமார் 20 நிமிட நேரம் குறையும் என சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.