ஓஸ்கார் மற்றும் கிறாமி விருதுகளுக்கு நியமிக்கப்பட்டவரும், மேற்குலக இசையில் பிரபலமானவருமான, ஈழத்தில் பிறந்த, மாயா அருள்பிரகாசம் அவர்கள், ஜுன் 4ம் திகதித் தேர்தலில், யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி ஜனநாயகம் அவர்களை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்குமாறு, பிரித்தானியா வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்து, இலவசமாக ஒரு பாடலையும் அளித்து, இணையத்தள பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஒரு சுயாதீன வேட்பாளராக லண்டன் தேர்தல் பிராந்தியத்தில் போட்டியிடுகிறார். மாயாவின் ஆதரவானது அவரது பல பிரித்தானிய இளைய ரசிகர்களை இத்தேர்தலில் ஜனநாயகத்துக்கு வாக்களிக்க ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனப் பிரச்சார ஒழுங்கமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment