Monday, June 1, 2009

இலங்கை அரசின் வெற்றிக்கு பாக்கிஸ்தான் விமானிகளே காரணம் என அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது

இலங்கையிடம் உள்ள மிக் 27 ,கிபீர் விமானங்கள் எப் 7 ,மற்றும் MI-24 உலங்கு வானூர்திகள் என்பனவற்றில் பெரும்பாண்மையான விமானங்களை தமது விமானிகளே செலுத்தியதாக தற்போது பாக்கிஸ்தான் பத்திரிகை கூறியிருப்பது இலங்கை அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இருப்பினும் இந்த தகவலில் எது வித உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் ரோசான் குணதிலக மறுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது விமானப்படையில் நன்கு பயிற்சி பெற்ற பல விமானிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் தம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட 22 அல் காலீட் கவச வாகனங்கள் மூலமே இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்றும் அந்த நாழிதளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனையும் மறுத்திருக்கும் உதயநாணயக்கார, தாம் செக் குடியரசின் தயாரிப்பான T- 55 வகையான கவசவாகனங்களை பாவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்சனை , மதப்பிரச்சனை, மற்றும் தீவீரவாதம் தலைதூக்கி ஆடும் இந்த காலகட்டத்தில், இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பாக்கிஸ்தானின் உதவியால் தான் என்ற் செய்திகள் பரவலாக அடிபடுகின்றன, இச் செய்தி பல நாழிதளில் வெளிவந்தவண்ணம் உள்ளது, பெரும் சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.