Tuesday, June 2, 2009

அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈடுபட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால், அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய அடெல் பாலசிங்கம் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.