தயவு செய்து இந்த நேரத்தில் ஆவது உங்களின் துப்புக் கெட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு உலகம் பூராவும் உணர்வுகளுடன் கிளர்ந்து தெருவிலே திரண்டு நிற்கும் அந்த மக்களிற்கு துணையாக நேரடி நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பில் உடனே சேர்த்துக் கொள்ளுங்கள்...........
மக்களின் பங்கெடுப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை புரியாமல் தமிழ் மக்களிற்கு என ஊடகம் நடத்துகிறீர்களே...... இதை நினைக்கும் போது உங்களிற்கே வெட்கமாய் இல்லை.......???????
அதனால் தயவு செய்து உங்கள் ஒலி ஒளி பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்!!!
இல்லையேல் தமிழ் துரோகிகள் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..........
நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்தினால் உண்மையில் தெருவிலே மக்கள் வெள்ளம் நிறைவதை யாராலும் தடுக்க முடியாது.........
எனவே வரலாற்றுக் கடமையில் இருந்து தவறிப்போய் பாரிய வரலாற்றுத் தப்பை செய்ய துணை போகாதீர்கள்!
தெருவிலே நிற்கும் எல்லா உறவுகளும் குறிப்பாக தொலைக்காட்சிகளையே சாடுகிறார்கள். எனவே தொலைக் காட்சிகளே விரைந்து செயல்படுங்கள்.........
குறைந்தது இந்த 3 நாட்கள் என்றாலும் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்!!
No comments:
Post a Comment