Monday, May 25, 2009

வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் விரைவில்

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவித்தல்  இன்று நள்ளிரவு வர்த்தமானி மூலம் விடப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. 

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்வர்.

இக்கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.