தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை என்ன வழியிலேனும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக கள்ள வாக்குகளினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அநேக உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் வகையில் தேச விரோத செயல்களில் ஈடுபட்டோரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் உருவாகிய கட்சிகள் ஊடாக தமிழ் மக்கள் அரசியலுக்குள் வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment