Monday, May 25, 2009

ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போகும் புலிகளின் அறிவிப்பை அரசாங்கம் நிராகரிப்பு

ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். "பலவருடகாலங்களாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிந்த விடுதலை புலிகள் இயக்கம் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவார்கள் என நான் நினைக்கவில்லை" என பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளை தான் விரும்பவில்லை என தொலைபேசி நேர்காணலின் போது பி.பி.சி .க்குத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

பிபிசி தமிழோசைக்கு செல்வராசா பத்மநாதன் வழங்கிய நேர்காணலில் , இராணுவ ரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால், தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக ரீதியில், அகிம்சா வழியில் இணையப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி நேர்காணலின் போது பி.பி.சி .க்குத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்

 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.