Saturday, May 16, 2009

அரசாங்கம், மனிதாபிமான மீட்பு தொண்டர்களை அனுமதிக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்: பிரிட்டன் எச்சரிக்கை

வன்னி யுத்த வலயத்திற்குள் மனிதாபிமான மீட்பு தொண்டர்களை அனுமதிக்காவிட்டால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க சர்தேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், பிரிட்டன் பிரதமர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதங்களை கீழே வைத்து, பொதுமக்களை விடுவிக்க விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோர்டன் பிரவுண் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.