Saturday, May 16, 2009

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டம்

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக பொருளாதார கட்டுப்பாடடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை நிராகரித்ததனைத் தொடர்ந்து இந்த திட்டம் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும், பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிக்குமாறும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.