“சிறிலங்காவினால் நடாத்தப்பட்ட இராணுவத்தாக்குதல்களானது ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி ஆயிரக்கணக்கான பொது மக்களின் இறப்புக்களையும், நூறாயிரக்கணக்கானோரின் இடபெயர்தலையும் ஏற்படுத்தியுள்ளது”, என தென்.ஆப்பிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஏகிராகிம் ஏபிராகிம் இன்று வெளியிட்ட ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.
இதில், சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் ஜெனிவா மரபுகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாகத் தொடங்கும்படி ஐ.நா.வைக் கேட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நீண்ட காலக் குறைகளைக் கருத்தில் கொண்டு சகல சிறுபான்மை மக்களுடனான சமாதானப் பேச்சுக்கும் அழைப்பு விடுத்துள்ளார், எகிராகிம் அவர்கள்.
No comments:
Post a Comment