மலேசியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பத்துமலை திருத்தலத்தில் இன்று கூடிய பல்லாயிரம் மலேசிய தமிழ் மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என அறைகூவல் விடுத்தனர்.
இப்போராட்டத்தில் அனுமதி இல்லையெனவும் கலந்து கொள்ள வேண்டாமெனவும் மலேசிய பொலிஸ்படைத்தலைவர் விடுத்த எச்சரிக்கையை மீறி அலையெனத்திரண்ட மலேசியத்தமிழ் மக்கள் தமிழீழம் மலரும் அண்ணன் பிரபாகரன் வாழ்க என விண்ணளவாக கோசம் எழுப்பினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் சுமார் ஜந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மலேசியாவில் ஈழத்தமிழ்மக்களுக்காக நடைபெயற்ற மிகப்பெரிய உணர்வெழுச்சி இதுவென கூறப்படுகிறது.
No comments:
Post a Comment