Sunday, May 24, 2009

பொலிஸ்படைத்தலைவர் விடுத்த எச்சரிக்கையை மீறி அலையெனத்திரண்ட மலேசியத்தமிழ் மக்கள்!




மலேசியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பத்துமலை திருத்தலத்தில் இன்று கூடிய பல்லாயிரம் மலேசிய தமிழ் மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என அறைகூவல் விடுத்தனர்.

இப்போராட்டத்தில் அனுமதி இல்லையெனவும் கலந்து கொள்ள வேண்டாமெனவும் மலேசிய பொலிஸ்படைத்தலைவர் விடுத்த எச்சரிக்கையை மீறி அலையெனத்திரண்ட மலேசியத்தமிழ் மக்கள் தமிழீழம் மலரும் அண்ணன் பிரபாகரன் வாழ்க என விண்ணளவாக கோசம் எழுப்பினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் சுமார் ஜந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மலேசியாவில் ஈழத்தமிழ்மக்களுக்காக நடைபெயற்ற மிகப்பெரிய உணர்வெழுச்சி இதுவென கூறப்படுகிறது.




















(மன்னிக்கவும் கமராவிலுள்ள தொழில்நுட்பக்கோளாறால் திகதி பிழையாகவுள்ளது)

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.