Sunday, May 24, 2009

அம்பாறையில் தாக்குதல் மூன்று படையினர் பலி: விடுதலைப் புலிகள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் பாரிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கினர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இதேவேளையில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய பிறிதொரு தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.