Wednesday, May 27, 2009

தம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளில் கரும்புலிகள் எவரும் இல்லை சரத்பொன்சேகா

தம்மிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் புலி உறுப்பினர்களில் கரும் புலிகள் எவரும் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 9,100 பேரை தாம் இதுவரை சோதனைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தியுள்ளதாகவும், அதில் ஒரு கரும்புலி உறுப்பினர் கூட இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது பெரும் சந்தேகத்தை உண்டாக்கியிருப்பதாக அச்சம்வெளியிட்டுள்ள அவர், கரும்புலிகள் வேறு பகுதிக்குள் ஊடுருவியிருக்கலாம் என தாம் அச்சம்மடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இவ்வாறு கருத்துக் கூறுவதன் மூலம் நாட்டின் சகல இடங்களிலும் இராணுவச் சோதனைச் சாவடிகளை அதிகரிப்பதே இதன் உள்நோக்கமாகும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.