தற்போது கிடைத்த செய்திகளின் பிரகாரம், நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் இன்று மதியம் கூடி ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் கனேடிய தூதுவராலயம் முன்னர் கூடியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு கனடா உதவுவதாகக் குறிப்பிட்டும், சமீபத்தில் கனடாவில் புத்தவிகாரை எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் கோசமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் காடையர்களும் மேலதிகமாக இணைந்துகொண்டு, கற்களை வீசியும், பல பொருட்களால் கனேடிய தூதுவராலயத்தைத் தாக்கியுள்ளனர்.
கனேடிய தூதுவராலய சுவர்களிலும் வழாகத்திலும், விடுதலைப் புலிகளின் சுலோகங்களை எழுதியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்த் துறையினர் கண்டும் காணாதது போல இருப்பதாகவும் அதிர்வின் கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment