இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்தில் சரணடைவோரை தடுத்துவைக்க யாழ் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தலை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி நீதிபதிகளுக்கு வெளிப்படையாக விடுத்துள்ளதாக அதிர்வின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
நேற்றைய தினம் நீதிபதிகளுக்கும், அரச படையினருக்கும் இடையில் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. இச் சந்திப்பில் சரணடையும் இளைஞர்களை தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கக்கூடாதென்றும், மாறாக அவ்வாறு வரும் அவர்களை மனித உரிமைக் கழகத்திடம் செல்லுமாறு நீதிமன்றம் பணிக்கவேண்டும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
யாழ் மனித உரிமைக் கழகமானது தற்போது கொழும்பின் நேரடி நிர்வாகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனி யாழ் நீதிமன்றத்தில் தஞ்சமடையும் எவரையும் யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது
No comments:
Post a Comment