Friday, May 22, 2009

சர்வதேச ரீதியாக புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியை வழங்குதல், அந்த அமைப்பிற்காக நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து குறித்த நாடுகளது இலங்கைத் தூதரங்களின் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளினால் புலிகளுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.