Thursday, May 28, 2009

புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அகதி முகாமில் கைது என்கிறது அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினி அகதி முகாமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள அகதி முகாமொன்றில் தமிழினி தனது தாய் மற்றும் சகோதரியுடன் தஞ்சமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் தவிர்ப்பு வலயத்தில் அப்பாவி பொதுமக்களுடன் இணைந்து தாமும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.