Saturday, May 16, 2009

போர்ப்பகுதி மருத்துவர்களுக்கு அமைதி விருதுக்கு ஐ.நா பரிந்துரை

இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்து வரும் போர் ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியிருப்பது போல் தோன்றும் நிலையில் , அந்தப்பகுதியில் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றிவந்த வரதராஜா, சத்யமூர்த்தி போன்ற மருத்துவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்று ஐ.நா மன்ற இலங்கை அதிகாரி கோர்டன் வெயிஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய வெயிஸ், இந்த மருத்துவர்கள் இந்த கடினமான மாதங்களில் அப்பகுதியில் மருத்துவ சேவைகளை தன்னந்தனியாக நடத்தும் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள். மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவிய சூழலிலும், பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டு காயமடைந்த சூழலிலும் அவர்கள் தங்கள் பணியை தங்களால் முடிந்த மட்டில் செய்தார்கள். எனவே ஐ.நா மன்றம் அவர்களுக்கு அமைதி பரிசு தர சிபாரிசு செய்திருக்கிறது. அவர்களை பிப்ரவரியிலேயெ இந்த பரிசுக்கு சிபாரிசு செய்துள்ளோம். என்றார் கார்டன் வெயிஸ்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.