Sunday, May 31, 2009

அரசியல் தீர்வினை முன்வைக்க நோர்வேயிடம் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசம்: சிங்கள ஊடகம்

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க, நோர்வேயிடம் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அழைக்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொடவை நோர்வேக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நோர்வே விஜயத்தை கடுமையான சாடிய இலங்கை அரசாங்கம், இரகசியமான முறையில் மிலிந்த மொரகொடவை நோர்வேக்கு அனுப்பி வைகக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் போது நோர்வேயிடம் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்பு குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.