Wednesday, May 27, 2009

தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்த கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் குடும்ப உறுப்பினர்கள் அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் மெனிக் பாம் அகதி முகாமிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது தமிழ்ச் செல்வனது மனைவி மற்றும் பிள்ளைகளை தாம் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்களை தமது சொந்தங்களுடன் மீள இணைப்பதாக தாம் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூசையின் குடும்ப உறுப்பினர்களையும் தாம் சந்திக்க விரும்புவதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

அகதி முகாம்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.