சிறீலங்கா அரசாங்கத்தினால் தங்கள் உறவுஇ உடமை மற்றும் சொந்த இடங்களை இழந்து தங்கள் நாட்டிலேயே அகதிகளாக அநாதைகளாக தடுப்புமுகாம்களில் முட்கம்பிகளுக்கு இடையே அல்லலுறும் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பிரித்தானியாவை வலியுறுத்தி இன்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சிறீலங்க ஆக்கிரமிப்பில் தவிக்கும் தமிழ் மக்கள் மற்றும் உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு அடையாளம் இருப்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ் தேசியக்கொடியை பலர் தாங்கி நின்றனர். மதியம் 3 மணியளவில் பிரித்தானிய காவல்துறையினர் கொடியை பறி முதல் செய்ய வந்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இருந்த போதிலும் தேசியக்கொடியை தாங்கி நின்ற இளைஞர்களை புகைப்படம் பிடித்த காவல்துறையினர் அவர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்துள்ளனர்;. இதை பற்றி பயமற்ற தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழீழ் தேசியக்கொடியை தாங்கி நின்றனர்.
கடந்த மூன்று நாட்கள் போன்று நாளையும் (22-05-09) வன்னி மக்களின் அவலத்தை சர்வதேச சமூகத்திற்கு பிரதிபலிக்கும் முகமாக ஜரோப்பிய நாடக கலைஞர்கள் தங்கள் திறமையால் பிரதிபலிக்கின்றனர். இவர்களுடன் பிரித்தானிய வாழ் கலைஞர்களும் இணையவுள்ளனர். ஆகவே அனைத்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களையும் இனிவரும் போராட்டங்களில் இணைந்து எங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கும் படி பிரித்தானிய தமிழ் மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment