Wednesday, May 27, 2009

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க பாகிஸ்தான் அரசாங்கமே அதிக உதவிகளை வழங்கியது: ஜே.வி.பி.

இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க பாகிஸ்தானிய அரசாங்கமே அதிக உதவிகளை வழங்கியதாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுத்த யுத்தத்திற்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானிய அரசாங்கம் வழங்கிய ஆயுதங்கள் யுத்தத்தின் போது பெரும் உதவியாக அமைந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.