Monday, May 25, 2009

வரலாற்றில் நடைபெற்ற மோசமான சம்பவங்கள் திரும்ப இடம்பெறாதிருக்க அனைவரும் பாடுபட வேண்டும்: பான் கீ மூன்


இலங்கையில் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருக்க அனைவரும் பாடுபட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அரசாங்கம் உடனடியாக அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வடக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சேவையாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.