Sunday, May 24, 2009

பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் இருக்கக் கூடும்: பாதுகாப்புப் பேச்சாளர்


பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் இருக்கக் கூடுமென அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, பிள்ளைகளது சடலங்கள் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த வலயத்தில் உயிரிழந்தவர்களது சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பிரபாகரனின் மனைவி மற்றும் மக்கள் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கக் கூடுமென தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, பிரபாகரனது உயிரிழப்பு குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும், அவரது உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், சட்டத் தேவைகள் ஏற்பட்டால் மரபணு பரிசோதனைகளை நடாத்த அரசாங்கம் தயாராக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்ட போதிலும் மரபணு பரிசோதனைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, மற்றுமொரு இலங்கை ஊடகத்தில் பிரபாகரனின் மரபணு பரிசோதனை அனாவசியமானதென இராணுவப் பேச்சாளர் செவ்வியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.