Sunday, May 24, 2009

இந்தோனேசியா ஆச்சே தீவுப் பகுதியில் இருக்கும் 55 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

கடந்த மாதம் புதுமத்தளான் பகுதியில் இருந்து தப்பிச் சென்ற 55 பேர் கொண்ட அகதிகளின் படகு திசைமாறி இந்தோனேசியக் கடற்பக்கமாகச் சென்றுள்ளது. இது ஆச்சே தீவுப்பகுதி்யில் கரை ஒதுங்கியதாக அறியப்படுகிறது. இருப்பினும் இதில் பலர் இளைஞர்களாகக் காணப்படுவதால் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என இலங்கை அரசாங்கம் இந்தோனேசிய அரசிடம் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தடுத்துவைக்கபட்டுள்ளனர்.

இந் நிலையில் தம்மை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருப்பதாகக் கூறி அகதிகள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் சிறுவர்களும், பெண்களும் அடங்குவதாக  நிருபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.