Tuesday, June 2, 2009

வடக்கில் உள்ள ஆயுதக் குழுக்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் - சித்தார்த்தன்

நாட்டில் குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து ஆயுதக் குழுக்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்னதாக துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்கள் களையப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஆயுதப் படையினரைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஆயுதம் தரித்த குழுக்களினதும் அயுதங்கள் களையப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இயங்கி வரும் சில ஆயுதக் குழுக்கள் தொடர்ந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக புளொட் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடைபெறவுள்ள யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத்தேர்தல்களில் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சின்னமாகிய குத்துவிளக்குச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.