Tuesday, June 2, 2009

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாது - இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போராட்டத்தில் அடைந்த இராணுவ வெற்றியை கொண்டாடும் நிகழ்வுகளின் போது புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாதென படைத்தரப்பு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை அதி நவீனரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் அவற்றை காட்சிப்படுத்த இது சிறந்த தருணமல்ல எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் மிகவும் கோலாகலமாக இந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.