இலங்கையின் வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பு காரியாலயம் தெரிவித்துள்ளது
அதேநேரம், இளைஞர்களும் யுவதிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிலையத்தின் தகவல்படி, வன்னியில் இருந்து 276 ஆயிரத்து 785 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆனால் இந்தக் கணக்கெடுப்பு தகவல் வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் ஐ.நா. மன்றம் வெளியிட்ட கணக்கெடுப்பு விபரத்தின்படி 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் கடத்திச் செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment