Wednesday, May 27, 2009

கொழும்பு வத்தளையில் உள்ள தமிழரின் கடைக்கு தீவைப்பு

கொழும்பு மாவட்டம், வத்தளை கல்வெட்டி வீதியில் அமைந்திருந்த தமிழ் வர்த்தகருக்கு சொந்தமான கடையொன்றை இனந்தெரியாத சிலர் தீ மூட்டியுள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை மோட்டார் வாகனத்தில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த செயலை செய்துள்ளதாக குறித்த வர்த்தகரினால் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அந்த கடை முழுமையாக தீக்கிரையானதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே தமது வாகனத்தை இவ்வாறான சில அடையாளம் தெரியாதவர்கள் சேதப்படுத்தியதாகவும், அந்த கடையின் உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.