Monday, May 18, 2009

தீக்குளிக்கின்ற முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் வைகோ வேண்டுகோள்

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரன் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்று செய்திகள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த கடலூர் மாவட்டம் - குறிஞ்சிப்பாடி ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவரான 50 வயது நிரம்பிய பிரகாசம் எனும் கழகத் தோழர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். உடனடியாக அவர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியாகி இருக்கின்ற செய்திகளால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் சோகக் கடலில் ஆழ்ந்துள்ள நிலையில் உலக மகா வீரன் பிரபாகரன் அவர்களைப் பற்றி வெளியாகி உள்ள செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தீக்குளிக்கின்ற முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்..

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.