Monday, May 4, 2009

இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதல் நடத்துகின்றனர்

இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதலை தொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் போன்ற பிரதேசங்கள் மீது கடும் எறிகனைகள் வந்து வீழ்ந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தரையிறக்க முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த நிலையில், இன்று காலை புலிகள் நடத்திய தாக்குதலில் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையிலும் இராணுவத்தினர் இந்த எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் அதேவேளை பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முழு சேதவிபரங்களையும் பெற நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதுவரை அதிர்வின் செய்தியுடன் இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.