இன்று சனிக்கிழமை வவுனியாவிலுள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப். கேணல் சரத் பொன்சேகா வன்னிப் படைத் தளபதிகளுடன் தற்போதைய களமுனை நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இராணுவ தளபதியை வரவேற்றுற்றுள்ளார்.
அதன்பின்னர் வன்னிக் கூட்டுப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யுத்தமுனையிலுள்ள இராணுவ தளபதிகளுடன் தற்போதைய சமர்க்கள நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததாகவும், எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சில உத்தரவுகளை இராணுவ தளபதி பிறப்பித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment