Monday, May 25, 2009

த.தே.கூ. பத்மநாதனின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகிறது: சுவிஸ் தமிழர் பேரவை

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது.

போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரசியலில் அதீத நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார்.

காலச் சூழல் அதற்கு இடம்தராத நிலையிலும் கூட கடைசிவரை நிதானம் தவறாது மக்களுக்காகச் சேவை செய்தார்.

தமிழ்த் தேசியத்தின் விரோதிகள் அவரது பாதையைத் தடம்புரளச் செய்ய பல தடவைகளில் முயற்சி செய்தபோதிலும் கூட அது இறுதிவரை கைகூடவில்லை.

ஆசை வார்த்தைகள் கூறி அவரைத் தமது வலையில் சிக்க வைக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வளைந்து கொடுக்காத அவர் இறக்கும் வரை தான் கொண்ட கொள்கையில் வழுவாது இருந்தார்.

இறுதி மூச்சு வரை இலட்சியப் பற்றுடன் வாழ்ந்து மறைந்த அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது கவலையைக் காணிக்கையாக்குகிறோம். ஈழத் தமிழ் மக்கள் மனதில் அவரின் நாமம் நீங்காது நிலைத்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.