Sunday, May 3, 2009

புலிகளின் சுழியோடும் பிரிவினர் கடலுக்கடியில் தாக்குதல் டோராப்படகுகள் தப்பியோட்டம்

கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த கடற்படையினர் இந்த ஆழ் கடல் தாக்குதல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் மிக அருகாமையில் நிலைகொண்டிருந்த இப் படகுகள் தற்போது ஆழ்கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டைவாய்கால் பகுதியிலும் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும், இருப்பினும் இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.