தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் பற்றி தெரிந்து கொண்ட பல மாணவர்கள் கண்ணீர் மல்கியதுடன் தங்களால் இயன்றளவு இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.






No comments:
Post a Comment