Sunday, May 10, 2009

சர்வதேச சமூகத்திடம் விடுதலைப்புலிகள் சர்வதேச வழிமுறைகளில் செயற்பட கோரிக்கை

கடந்த 24 மணிநேரத்திற்குள் 2000ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்கள் மீது எறிகணை குண்டுதாக்குதல்களை நடாத்துகின்றது.



இதுபோர்க்குற்றமாகும் மற்றும் அரச பயங்கரவாதம் எனவும் விடுதலைப் புலிகளின் சர்வதேச இராஜதந்திர தொடர்புகளுக்கு பொறுப்பான திரு.எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்கள் ஐநா மற்றறும் சர்வதேச சமூகம் ஆபத்திற்குள் இருக்கும் பொதுமக்களைப் பாதுகாக்கும் தமது கடமையில் இருந்து தவறியுள்ளதால் மிகவும் மனவிரக்தியடைந்துள்ளனர்.



கடந்த காலங்களில் ஏனைய சர்வதேச முரண்பாடுகள் நிகழ்ந்த பகுதிகளில் ஐநா மற்றும் சர்வதேச சமூகம் நடுநிலையாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதுபோல் ஈடுபடவேண்டும் என்பதையே நாம் கேட்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.