Friday, May 22, 2009

கொழும்பு பாடசாலைகளுக்கு இன்று சிறப்பு விடுமுறை: கொழும்பில் தொடரும் வெற்றி விழாக் கொண்டாட்டம்

வடபகுதியில் சிறிலங்கா படையினர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்த்தனபுர பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பேரணி ஒன்றையும் கொழும்பில் இன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்கனவே நேற்று முன்நாள் அரசாங்க, வங்கி மற்றும் தனியார் துறையினருக்கான சிறப்பு விடுமுறை ஒன்றை அறிவித்த அரசாங்கம், இன்று கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியிருப்பதுடன் பேரணியையும் நடத்தவிருக்கின்றது.

அத்துடன், இன்று தொடக்கம் இன்னும் ஒருவார காலப் பகுதிக்கு தேசிய ரீதியாக வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனை முன்னிட்டு மாவட்ட ரீதியாக விழாக்கள், பேரணிகள் போன்றன ஆரசாங்க ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன.

இன்று மாலை கொழும்பு கம்பல் பூங்காவில் இருந்து புறப்படும் பேரணி சிறீ ஜெயவர்த்னபுர நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடையும் எனவும் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் உரையாற்றவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.