Monday, May 18, 2009

பிரபாகரன் மரணம் அடைந்தமைக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் தேடும் இந்தியா

புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் மரணம் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் கோரியுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி இவ்வாறு கோரியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பிரதான எதிரிகளாக பிரபாகரனும் பொட்டம்மானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மரணித்து விட்டமைக்கு விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் நாம் இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.