Thursday, May 7, 2009

'தமிழ் இனப்படுகொலையினது முக்கிய ஆதாரங்களை ஐ.நா. மறைத்து வைத்திருந்தது ஏன்?’ - இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி

சிறிலங்கா அரசாங்கம் அப்பாவித்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டிருக்கும் போரில், உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையையும, பாதுகாப்புவலயம் மீது இராணுவம் நடாத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பிடித்த அந்தரங்க செய்மதிப்படங்கள் போன்ற ஆதாரங்களையும் ஐ.நா. மறைத்தது ஏன் என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதேபோன்ற தகவல்களை காசாப்பிரச்சினையின்போது உடனேயே வெளியிட்ட ஐ.நா., இலங்கையில் மட்டும் அதை வெளியிடாமல் விட்டதன் நோக்கமென்ன என்பதை இன்னர் சிற்றி பிறஸ், ஐ.நா. செயலாளர் நாயகம், பான் கி மூனை கேட்டுள்ளது. இதற்கு பான் கி மூன் பதில் வழங்காமல், மாறாக இலங்கை அரசாங்கத்துடன் தான் தொலைபேசியில் பேசிய, மக்களைப் போர் வலயத்தில் இருந்து மீட்பது போன்ற விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. உதவிக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க தாமதிப்பதும், தமிழ்மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அவலங்கள் பற்றிய ஆதாரங்களை மறைத்து வைத்திருப்பதும், தமிழ் வட்டாரங்கள் இடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராய வேறொரு விசேட பிரதிநிதியை அனுப்புவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பான் கி மூன் அவர்கள் அதைப்பற்றி பிறகு முடிவுசெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.