Wednesday, May 13, 2009

சிறிலங்கா உடனடியாக யுத்தத்தை நிறுத்தவேண்டும்: ஓபாமா அழைப்பு

வன்முறையை நிறுத்தி பொதுமக்களின் வேதனைகளை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா ஜனாதிபதி, பாராக் ஓபாமா அழைப்பு விடுத்துள்ளார்.



பல நூற்றுக்கணக்கான பொது மக்களைக் கொல்லும் சிறிலங்கா இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துமாறும் மற்றும் ஐ.நா. மனிதாபிமான பணிக் குழுவை மக்களின் இடங்களுக்குச் செல்ல அனுமதி தருமாறும் சிறிலங்கா அரசுக்கு ஓபாமா அழைப்பு விடுத்துள்ளார்.



மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைக் கீழே போடுமாறும், மக்களை வெளியேறவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



இவற்றைக்கூறிய ஓபாமா தமிழருக்குரிய தனி நாட்டுக்கான பொறுப்பை எடுக்க தயாரா என்றும் மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கும், நம்பிக்கைக்கும் முழு உத்தரவாதம் தருவாரா எனவும் அமெரிக்க தமிழ் புத்திஜீவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.