Tuesday, May 19, 2009

நாடு திரும்புமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

மீண்டும் இலங்கைக்கு திரும்புமாறு புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்ட தேசத்தை மீளக் கட்டியெழுப்பு, அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள புலம்பயெர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதை, நீர் வடிகாமைப்பு மற்றும் மின்சாரவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.