தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒன்று அவசியம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியறுத்தியுள்ளது.
இதன் பொருட்டு கொழும்பு அரசாங்கம், அதிகாரப்பகிர்வு உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தி முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் இயன் கெலி தெரிவித்துள்ளார்.
உண்மையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமானால், மோதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமையால் ஏற்பட்ட களங்கத்தை அரசாங்கம் முதலில் துடைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களின் சுதந்திரமான வாழ்வினை உறுதி செய்து, நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே உண்மையில் அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
பக்கச்சார்பின்றி, அனைத்து மக்களுக்கும் பொதுவான ஆட்சியினை அரசாங்கம் ஏற்படுத்துமானால் அதுவே உண்மையான வெற்றியாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இறுதியானதும், உறுதியானவுமான சமாதானம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமானால், அதிகாரப்பகிர்வு ஒன்று கட்டாயம் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment