Friday, May 15, 2009

மலேசியாவில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் படங்கள்

மலேசியத் தமிழர்களால் இன்று 15-05-2009 மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக நண்பகல் 12 மணியளவில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக்கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
கோலாலம்புரில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்தக்கு முன்பாக கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழீழத்தேசியயக்கொடி ஈழத்தில் மக்கள் படும் அவலங்களின் விவரணப்படங்கள் தேசியத்தலைவரின் உருவப்படங்கள் போன்றவற்றை தாங்கி நின்றவாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இதன்போது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவின் சவப்பெட்டி ஊர்வலம் நடைபெற்று தூதரகத்துக்கு முன்பாக ஆவேசம் கொண்ட மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.அத்துடன் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன் சிங் ஆகியோரின் பொம்மைகள் படங்களுக்கு ஆவேசம் கொண்ட மக்களால் செருப்படி வழங்கப்பட்டது

மலேசியப்பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப்பேரணிநடைபெற்ற போதும் ஆவேசம் கொண்ட மக்கள் எமது உறவுகள் சிறிலங்காவில் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக்கூறியவாறு தூதரகத்துக்கு உள்ளே நுழைய முயன்றனர். இதன்போது பொலிசார் தடியடி நடத்தினர்.












No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.