இம் மனிதசங்கிலிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டம், பொதுச்சுடர் ஏற்றலுடன், கியூபெக் கனேடிய கொடிகளோடு தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.
இவ் எழுச்சிக் கூட்டத்தில் அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த மனித உரிமைகள் ஆர்வலர் கரன் பார்க்கர் அம்மையார் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தன்மையை வலியுறுத்தி சிறப்புரை வழங்கினார்.
தொடர்ந்து ஒன்ராறியோ மாநகர கல்விச்சேவை உறுப்பினர் நீதன் சண் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து மாணாவர்களின் உரைகளோடு கொடி இறக்கத்துடன் கூட்டம் நிறைவுபெற அங்கே அலையெனத் திரண்டிருந்த மக்கள் அனைவரும் பிரதான வீதியை மறித்து வீதிமறியல் போராட்டத்தையும் நடத்தினர். அத்துடன்,
உடனடி மருந்து, உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும்,
தொடரும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தும்படியும்:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடயை நீக்கவும்,
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீக்கரிக்க வேண்டும்
என்னும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேறும்வரை இப்போராட்டம் தொடரும் என அறிவிக்கபப்ட்டு தொடர்ந்தவண்ணம் உள்ளது.



No comments:
Post a Comment