Sunday, May 17, 2009

மலையகம்.கம்பஹா பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது

தலவாக்கலையில் வைத்து ஆறு மலையக இளைஞர்களும், கம்பஹாவில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 25 பொதுமக்களும் காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர்கள் அறுவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,காவல்துறை குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹாவில் 10 தமிழர்கள் உள்ளிட்ட 25 பொதுமக்களும் காவற்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது இந்த 25 பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தமது ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.