வன்னியில் இருந்து கிடைத்த இறுதிக் குரல்
முல்லைத்தீவு மாவட்டம் மக்கள் பாதுகாப்பு வலயத்தை நோக்கி சிங்கள ராணுவத்தினர் மிக கொடூரமான தாக்குதலை மக்கள் மீது தொடுத்துள்ளனர் இது வரையில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ஈழதேசம்.கொம் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது ஆனால் இந்த செய்தியை எம்மால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது,எனவே இந்த செய்தியை உறுதிப்படுத்துவதற்கு ஈழதேசம்.கொம் இணையம் வன்னியுடன் தொடர்பை மேற்கொண்டுள்ளது
இன்று ராணுவத்தினர் ஆரம்பித்துள்ள தாக்குதலில் தமது முழுமையான அனைத்து பல படைத்தையும் ஒன்று திரட்டி மிகக்கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அங்கு வாழ்ந்து வரும் ஒரு லட்சத்து 65ஆயிரம் மக்கள் பெரும் மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்தியை அறிவதற்கு ஈழதேசம்.காம் இணையத்துடன் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment