Tuesday, May 11, 2010

கொழும்பு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் - மணிரத்தினம்

கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய பன்னாட்டு திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என, பிரபல தமிழ் இயக்குனர் மணிரத்தினம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தனது புதிய படமான இராவணன் படத்தை அங்கு திரையிட வேண்டாம் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடடித்த அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் கொழும்பு செல்வாரா எனக் கேட்டபோது, அது அவரது தனிப்பட்ட விருப்பம் என மணிரத்தினம் பதிலளித்துள்ளார்.

தமிழர்களைக் கொன்று குவித்த சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழாவினை தமிழ் திரையுலகம் உட்பட இந்தியத் திரைப்படத் துறையினர் நிராகரிக்க வேண்டும் என, நாம் தமிழர் உட்பட பல்வேறு தமிழ் உணர்வாளர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.