Saturday, May 16, 2009

போரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அரசு அறிவிப்பு

புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் முடிவடையும் கட்டத்தை நெருங்கி விட்டதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் நடக்கின்ற சண்டைகளில் புலிகள், பெருமளவில் கரும்புலிகளைப் பயன்படுத்தி தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15இற்கும் மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைப் புலிகள் மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு கூறுகிறது.

இன்று காலை 10 மணியளவில் வெடிமருந்து நிரப்பிய பஸ் ஒன்று கரையமுள்ளிவாய்க்கால் இராணுவ நிலைகளை நோக்கி வேகமாக வந்தபோது இராணுவத்தினரால் தாக்கி அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.